மரணவலி தரும் உன் மௌனம்..
என் ஆன்மாவை ஆணிவேரோடு பிடுங்கி அழகு பார்த்திடும் உன் ஆணவத்தில் என் அனைத்து ஆரம்பங்களும் அடங்கித்தான் போயின.. . தனிமையெனும் தீவில் துன்புறுத்தியும் தொல்லைபடுத்தியும் தற்காலிகமான தற்கொலைக்குத் தூண்டும் உன் நினைவுகள்.. . நாட்கள் நிறைந்த நொடிகளும் வருடம் நிறைந்த நிமிடங்களுமாய் நகராது நோகடிக்கிறது நாசூக்காய்.. . உன்னை நினைத்தே நுரைத்துக் கிடக்கிறது என் நுரையீரல்.. . நினைவுகளை தானமாகத் தந்துவிட்டு நிதானமாய்க் கொன்று கொண்டிருக்கிறாய்.. . என் கட்டுக்கடங்காத பிரியங்களைக் கலைத்தும் தொலைத்தும் விளையாடும் உனக்கு கண்கள் மட்டுமா கருணையும் இல்லை. . மண்புழுவாய்த் துடிக்கும் என் மனதினுள் மயானம் அமைத்து மறவாமல் அடிக்கிறாய் உன் மௌனச் சவுக்கால்.. . பட்டும் படாமலுமான உன் பார்வை நகத்தினால் படுகாயப்படுத்துகிறாய் பாழாய்ப்போன என் இதயத்தை. . நிர்வாணமாய்த் திரியும் என் நிம்மதிகளுக்கும் நார் நாராய்க் கிழிந்த என் காதலுக்கும் நீண்ட துணை உன்னாலான என் ரணங்கள் தான். . பத்திரமாய் பத்திரப்படுத்துகிறேன் நீ தந்த வலிகளை. ஆறாத
Comments
Ella uyirum samamthan.. amma.
Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
உங்களை ஏன் தூக்கிட்டு போறாங்க? நடக்க முடியாதா?
//
அட ஆமாங்க
ஏதும் பிரச்சனையா?
இது மிகவும் பழைய புகைப்படம்... பெரிய அளவில் ரவுண்ட் வந்த ஞாபகம்...
எனிவே... அந்த குழந்தை அந்த தாயிடம் என்ன கேட்டிருக்கும்?
மேலே
ஒரு குட்டிப்பெண்
கீழே....
அழகான புகைப்படம்
:)
மிருகத்தை சுமந்து செல்கிறது...!
தன் மனிதத்தை மறந்து...!